கிரீன் பார்க் இண்டர்நேஷனல் பள்ளி மாவட்ட அளவில் முதல் 3 இடங்கள் பெற்று சாதனை

கிரீன் பார்க் இண்டர்நேஷனல் பள்ளி மாவட்ட    அளவில் முதல் 3 இடங்கள் பெற்று சாதனை
X

சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த, நாமக்கல் கிரீன் பார்க் இண்டர்நேஷனல் பள்ளி மாணவ மாணவிகளை, பள்ளி தாளாளர் சரவணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

நாமக்கல் கிரீன் பார்க் இண்டர்நேஷனல் பள்ளி சிபிஎஸ்சி தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்று சாதனைபடைத்துள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் கிரீன் பார்க் இண்டர்நேஷனல் பள்ளி சிபிஎஸ்சி தேர்வில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்று சாதனைபடைத்துள்ளது.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட போதுப்பட்டியில் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இங்கு மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ், கிரீன் பார்க் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது 2024-2025 கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் கிரீன் பார்க் இண்டர்நேஷனல் பள்ளி பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் நாமக்கல் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி பிளஸ் 2 மாணவி ஜெயசுதா 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். நியன்த்ரா என்ற மாணவி 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2 ஆம் இடம் பெற்றுள்ளார். நிகால் அகமது. பிரதிக்யா, சாத்விகா, ஸ்ரீதுர்கா மற்றும் ஹாசினி ஆகிய 5 பேர் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் 3ஆம் பிடித்துள்ளனர். கிரீன் பார்க் இண்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவர்களில் 14பேர் 490க்கும் மேல் மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்:

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் கிரீன் பார்க் இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது. இப்பள்ளி மாணவர் கபிலேஷ்வரன் மற்றும் மஹாநதி சபரி ஆகிய 2 பேர் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளனர். மாணவர் சச்சின் சந்திரன், மாணவி பிரத்திகா ஸ்ரீ ஆகியோர் 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2 ஆம் இடம் பெற்றுள்ளனர். மேலும் சஞ்சனா என்ற மாணவி 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடம் பெற்றுள்ளார்.

சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த மாணவ மாணவிகளை கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சரவணன், அகடமிக் இயக்குனர், இயக்குனர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story