கலெக்டர் ஆபீசிற்கு ஹெல்மட் அணியாமல் டூ வீலர்களில் வந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 51 பேரிடம் அபராதம் வசூல்

கலெக்டர் ஆபீசிற்கு ஹெல்மட் அணியாமல் டூ வீலர்களில் வந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 51 பேரிடம் அபராதம் வசூல்
X

நாமக்கல் கலெக்டர் ஆபீசிற்கு ஹெல்மட் அணியாமல் டூ வீலர்களில் வந்த அதிகாகள் உள்ளிட்டோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

நாமக்கல் கலெக்டர் ஆபீசிற்கு ஹெல்மட் அணியாமல் டூ வீலர்களில் வந்த அரசு அதிகாரிகள் உட்பட 51 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் கலெக்டர் ஆபீசிற்கு ஹெல்மட் அணியாமல் டூ வீலர்களில் வந்த அரசு அதிகாரிகள் உட்பட 51 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவின் பேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார், மாவட்டம் முழுவதும் அடிக்கடி வாகன தனிக்கை செய்து சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து வருகின்றனர். குறிப்பாக டூ வீலர்களில் செல்பவர்கள் சாலை விபத்துக்களில் சிக்கி உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஹெல்மட் அணியாமல் டூ வீலர்களில் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கலெக்டர் உத்தரவின்படி நேற்று காலை, நாமக்கல் கலெக்டர் ஆபீசிற்கு டூ; வீலர்களில் வருபவர்களின் வாகனங்கள் ஆர்டிஓ அலுவலர்கள் மற்றும் போலீசார் மூலம் சோதனை செய்யப்பட்டன. அப்போது, டூ வீலர்களில் ஹெல்மட் அணியாமல் வந்த மொத்தம் 51 அரசுத் துறை அதிகா£ரிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோன்ற தனிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என போக்குவரத்து துறை அலுவலர்கள் கூறினார்கள்.

Next Story