மாவட்டத்தில் 177 அரசு பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு தேர்ச்சிக்கு கல்வித்துறை ஒப்புதல்

பைல் படம்
நாமக்கல்,
தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவுற்றது. பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கி, 27ம் தேதி முடிவுற்றது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 28 ல் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 177 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரின் முழு ஆண்டு பொது தேர்வு தேர்ச்சி விபரம் வெளியிடப்பட உள்ளது. அதற்காக, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதல் வழங்கும் பணி, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் தலைமை வகித்தார். இப்பணியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தலைமையிலான குழுவினர், பள்ளிகளின் தேர்ச்சி விபர பதிவேடுகளை முறையாக ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கினார். இதன் அடிப்படையில், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், தங்களது பள்ளியில், 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரின் தேர்ச்சி பெற்ற விபரத்தை முறையாக வெளியிடுவார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu