மோகனூரில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா: எம்.பி., பங்கேற்பு

மோகனூரில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை, ராஜேஷ்குமார் எம்.பி., திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.
நாமக்கல்,
மோகனூரில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை, மாவட்ட செயலார் ராஜேஷ்குமார் எம்.பி., திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருவதால், பொதுமக்களின் தாகம் தீர்க்க, தி.மு.க, சார்பில், ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதையடுத்து, தமிழகம் முழுவதும், திமுகவினர், தண்ணீர் பந்தல் திறந்து, பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம், மோகனூர் டவுன் பஞ்சாயத்தில், தி.மு.க. சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. மோகனூர் நகர செயலாளர் செல்லவேல் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய தி.மு.க., நவலடி, நாமக்கல் நகர செயலாளர் ராணா ஆனந்த், டவுன் பஞ்சாயத்து தலைவர் வனிதா, துணைத்தலைவர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், பானகம், தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்ச், லெமன் ஆகியவற்றை வழங்கினார். முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் உடையவர், நிர்வாகிகள் வரதராஜன், காமராஜ், ஹரி மற்றும் திரளான திமுகவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu