ரேஷன் கடைகளில் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி நல்வாழ்வு பார்வையற்றோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,
மாற்றுத்திறனாளிகளுக்கு, ரேஷன் கடைகளில் அனைத்து உணவுப் பொருட்களையும் இலவசமாக வழங்கக்கோரி பர்வையற்றோர் நல சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மனு அளித்தனர்.
நல்வாழ்வு பர்வையற்றோர் நல சங்கத்தின் சார்பில் நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் மூர்த்தி, ஆலோசகர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார். தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற மாதாந்திர உதவித்தொகை ரூ. 1,500ல் இருந்து ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரேஷன் கடைகளில் இலவசமாக உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஊர்திப்படி இரட்டிப்பாக வழங்க வேண்டும், மேலும், நடப்பு சட்டசபைக் கூட்டத்தொடரில் மாற்றுத்திறனாகள் நலத்0துறை மான்யக்கோரிக்கையின் போது இதற்கான உத்தரவை அறிவிக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும், இது குறித்த கோரிக்கை மனுவை கலெக்டர் ஆபீசில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் வழங்கினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu