நாமக்கல் ஹோட்டல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் ஹோட்டல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல்லில் ஹோட்டல் பணியாளர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் துவக்கி வைத்தார்.

நாமக்கல் ஹோட்டல் பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டுமென தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை தெரிவித்துள்ளது. இதில் நாமக்கல் மாவட்ட ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்களுக்கான தடுப்பூசி முகாம் நாமக்கல் நளா ஹோட்டலில் நடைபெற்றது. முகாமை நாமக்கல் சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல் தலைமை வகித்து துவக்கி வைத்தார். நாமக்கல் நளா ஹோட்டல் உரிமையாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட நட்சத்திர விடுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விதிமுறைகளை மாவட்ட சுகாதார உதவி மாவட்ட இயக்குநர் நக்கீரன் எடுத்துரைத்தார். இம்முகாமில் நாமக்கல் மாவட்ட ஹோட்டல்களில் பணியாற்றும் பணியாளர்கள் 600 பேர் பங்கேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தென்னிந்திய ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கத்தின் இயக்குநர் சுந்தரம் சிங்காரம் மற்றும் பிரியா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story