பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல்லில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திரப்பிரதேசத்தில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கச்சென்ற அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை கைது செய்த பாஜக அரசைக்கண்டித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். போராட்டத்தில், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வீரப்பன், பாச்சல் சீனிவாசன், சுப்பிரமணியம், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோ, ஜெகநாதன், ரங்கசாமி, ராமசாமி, தங்கராஜ், குப்புசாமி, இருசப்பன், நகர காங்கிரஸ் தலைவர்கள் மோகன், முரளி, பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், டவுன் பஞ்சாயத்து காங்கிரஸ் தலைவர்கள் சிங்காரம், இளங்கோ, சீனிவாசன், பிரிவுத்தலைவர்கள் பொன்முடி, சோழராஜன், கன்னியம்மாள், தாஜ், சாந்தி மணி உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story