/* */

ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து நாமக்கல்லில் நாளை அச்சகங்கள் முழு அடைப்பு

அச்சு காகிதத்திற்கு ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாமக்கல்லில் நாளை அச்சங்கள் முழு அடைப்பு.

HIGHLIGHTS

ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்து நாமக்கல்லில் நாளை அச்சகங்கள் முழு அடைப்பு
X

பைல் படம்

அச்சு காகிதத்திற்கு ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்டத்தில் நாளை அச்சங்கள் முழு அடைப்பு செய்யப்படும்.

அச்சகங்களுக்கு தேவையான காகிதம், அச்சு மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி வரி 12 சதவீத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் பெடரேசன் சார்பில், மத்திய அரசிடம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 14ம் தேதி சென்னையில், வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், நாளை மாநிலம் முழுவதும் உள்ள அச்சகங்கள் முழு அடைப்பு செய்யப்படுகிறது.

சென்னையில் நடக்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், அச்சக உரிமையாளர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் கலந்து கொள்றும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அச்சகங்கள் அனைத்தும், நாளை 14ம் தேதி ஒரு நாள் முழு அடைப்பு செய்யப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 13 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  2. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  3. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  5. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  6. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  8. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!