மக்கள் குறைதீர் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ. 7 லட்சம் நலத்திட்ட உதவி; கலெக்டர் வழங்கல்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு    ரூ. 7 லட்சம் நலத்திட்ட உதவி; கலெக்டர் வழங்கல்
X
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குøறைக்கும் நாள் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு, ரூ. 7 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தர். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 436 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பரிசீலனை செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 பேருக்கு ரூ. 7.01 லட்சம் ரூபாய் மதிப்பில், செயற்கை கை மற்றும் கால்கள், பார்வையற்றோருக்கான பிரெய்லி கை கடிகாரம், முதல்வரின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Next Story
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலினின் நிவாரண அறிவிப்பு!