நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் நலத்திட்ட உதவி வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில், பயனாளிகளுக்கு கலெக்டர் உமா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல்,
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
நாமக்கல் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 590 மனுக்களை வழங்கினார்கள். அவற்றைப் பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கி மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22,960 மதிப்பில் காதொலி கருவிகள், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.138 மதிப்பில் கண்கண்ணாடி, 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.430 மதிப்பில் மடக்கு குச்சி என மொத்தம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 23,528 மதிப்பில் உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், டிஆர்ஓ சுமன், சமூகப் பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu