நாமக்கல்லில் பாஜ சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

நாமக்கல் நகர பாஜ சார்பில் அமைக்கப்பட்டுள்ள, நீர் மோர் பந்தலை, கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சரவணன் துவக்கி வைத்தார்.
நாமக்கல்,
நாமக்கல் நகரில் பாஜ சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழ நடைபெற்றது.
கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பாஜ சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்க வேண்டும் என கூறியுள்ள மாநில பாஜ தலைவர் நைனார் நாகேந்திரன் மாநில பாஜ சார்பில் தாகம் தீர்ப்போம் என்ற இயக்கத்தை துவக்கி வைத்துள்ளார். இதையொட்டி நாமக்கல் நகர பாஜ சார்பில் பொதுமக்களுக்காக நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு நகர பாஜ தலைவர் தினேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பாஜ தலைவர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள், நீர் மோர் வழங்கினார். அப்போது நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், பெதுமக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களிலும் உடனடியாக தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார். திரளான பாஜவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu