வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை    பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
X

பைல் படம் 

நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல், 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரை துடைக்கும் வகையில், வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், மாதம் தோறும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு ரூ 600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இனி வரும் காலங்களில், மாதம் ஒன்றுக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ. 600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ. 1,000 வீதம், 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், தற்போது, கடந்த, 1ம் தேதி முதல், வரும் ஜூன் 30 வரையிலான காலாண்டிற்கு, மேற்கண்ட கல்வித் தகுதிகளை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் முடிவுற்ற பதிவுதாரார்களும், ஒரு ஆண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள்.

மேற்கண்ட தகுதியுடையவர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், டிஎன்வேலைவாய்ப்பு.ஜிஓவி.இன் என்ற வெப்சைட்டில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story