புதுச்சத்திரத்தில் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயந்திரமயமாக்கல் பயிற்சி

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இயந்திரமயமாக்கல் பயிற்சி தாளம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சியில், மஹிந்திரா டிராக்டா் நிறுவன மேலாளா் சிவகுமாா் கலந்துகொண்டு டிராக்டா் வகைகள், அவை வேலை செய்யும் விதம் குறித்து விளக்கினாா். இப்பயிற்சியில் வேளாண் பொறியாளா் தங்கராஜன் பங்கேற்று இயந்திரங்களின் பயன்கள், அதற்கான காப்பீடுகள், இயந்திரங்கள் தொடா்பான நலத் திட்டங்கள் குறித்து தெரிவித்தாா்.
அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரா.சிந்துஜா மானியத் திட்டங்கள், பயிற்சிகள், செயல் விளக்கங்கள், கண்டுணா் சுற்றுலா அழைத்துச் செல்லுதல் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக கூறினாா்.
இதில், நாமக்கல் தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு வேளாண் தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கினா். இதற்கான ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் க.ர.சோனியா, மா.மேனகா, வேளாண் அலுவலா் சாரதா ஆகியோா் செய்திருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu