ராசிபுரத்தில் முதுநிலை தட்டச்சு தேர்வு

ராசிபுரம் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்பத்துறை சார்பில் நடைபெற்ற தட்டச்சு தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்பு
ராசிபுரம் அருகே அமைந்துள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை சார்பில் நடத்தப்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகளில் ஆர்வமுடன் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சிங்களாந்தபுரம், புதுச்சத்திரம், மங்களபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 37 தட்டச்சு பயிற்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இத்தேர்வுகளில் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இளநிலை தட்டச்சு தேர்வில் ஆங்கிலத்தில் 468 மாணவர்களும், தமிழில் 208 மாணவர்களும் உட்பட மொத்தம் 676 பேர் பங்கேற்றனர். நேற்று நடைபெற்ற முதுநிலை தட்டச்சு தேர்வில் ஆங்கிலத்தில் 213 மாணவர்களும், தமிழில் 139 மாணவர்களும் உள்பட மொத்தம் 352 பேர் தேர்வெழுதினர். தொழில்நுட்பத்துறை சார்பில் நடத்தப்பட்ட இத்தேர்வுகள் சிறப்பாக நடைபெற்றதாக தேர்வு மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர். தட்டச்சு தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும், இச்சான்றிதழ்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற உதவும் என்றும் தட்டச்சு பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் தெரிவித்தனர். கணினி யுகத்திலும் தட்டச்சு திறமை தொடர்ந்து தேவைப்படும் திறனாகவே உள்ளது என்றும், மாணவர்கள் இத்திறனை பெறுவதன் மூலம் தங்களது வேலைவாய்ப்பு சாத்தியங்களை அதிகரித்துக்கொள்கின்றனர் என்றும் தேர்வு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu