குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்தவர் கைது

குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல்  மது விற்பனை செய்தவர்  கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம் பைல் படம்.

குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது செய்யபட்டார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்பனை செய்வதாக புகார் வந்தது.இதனையொட்டி குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டபோது, காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் எதிரில் உள்ள பெட்டிக்கடையில் மது விற்பது தெரியவந்தது. அங்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மது விற்பனை செய்த ராஜா (வயது30,) என்பவர் கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story
ai in future agriculture