/* */

வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

குமாரபாளையத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

HIGHLIGHTS

வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
X

குமாரபாளையத்தில் தாலுக்கா அளவிலான ஓட்டுச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப்பதிவு மெசின்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஈரோடு லோக்சபா தொகுதியில் நாமக்கல் மாவட்ட காவிரி கரையோர குமாரபாளையம் தொகுதியும் அடங்கும். குமாரபாளையம், பள்ளிபாளையம் இரு நகராட்சிகளை கொண்ட குமாரபாளையம் தொகுதியில் லோக்சபா தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சியினர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் ஆங்காங்கே தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

ஈரோடு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதியில், தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரம் விநியோகம், பூத் சிலிப் வழங்குவதற்கான பணிகள், ஆகியன செயல்படுத்தினர். குமாரபாளையம் தொகுதியில் ஓட்டுக்கள் பதிவு செய்யக்கூடிய ஈ.வி.எம். மெசின்கள், குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. சில நாட்கள் முன்பு இதனை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் வந்து,மெசின்கள் வைக்கப்பட்ட அறைகளை பார்வையிட்டு, பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

குமாரபாளையம் தொகுதியில் 279 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தேர்தல் சமயத்தில் பயன்படுத்த கண்ட்ரோல் யூனிட் 334, பேலட் மெசின் 334, வி.வி.பேடு 362, பாதுகாப்பு அறையில், மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்ட நிலையில் நேற்று அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பொறுப்பில் அனுப்பி வைக்கப்பட்டன. தாசில்தார் சண்முகவேல், உள்பட பலர் உடனிருந்து அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். ஓட்டுப்பதிவு மெசின்கள் கொண்டு செல்ல வாகனங்கள் தாலுக்கா அலுவலகம் முன்பாக நிறுத்தி வைக்கபட்டிருந்தது.

Updated On: 18 April 2024 2:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  2. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  3. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  6. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  7. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  8. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  9. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு