குமாரபாளையத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்

குமாரபாளையத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்
X

குமாரபாளையம் விட்டலபுரி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்த முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நேற்று வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்த முகாம் நடந்தது. இன்றும் இதே முகாம் நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும், பொதுமக்களுக்கு உதவிட கோரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் தாலுக்கா அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

குமாரபாளையம் விட்டலபுரி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் நடந்த முகாமில் மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, உஷா, மல்லிகா, நகராட்சி பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலரும் பங்கேற்று, பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் செய்தனர்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் வாக்காளர் பெயர் திருத்தும், சேர்த்தல் முகாமில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் செய்யுமாறு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தூய்மையே எங்களின் சேவை பணிகள்

தூய்மை இந்தியா திட்டம் சார்பில் தூய்மையே எங்களின் சேவை பணிகள் குமாரபாளையத்தில் அனைத்து வார்டுகளில், வார்டுக்கு இரண்டு இடங்கள் வீதம் 66 இடங்களில் நடத்தப்பட்டது.

நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், நகராட்சிகளின் நிர்வாக சேலம் மண்டல இயக்குனர், அலுவலக திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தனர்.

இதில் கூட்டு துப்புரவு பணி, குப்பை தேங்கியுள்ள இடத்தை தூய்மை செய்து கோலமிடுதல், பேருந்து நிலையத்தை தூய்மை செய்தல், அங்கன்வாடி வளாகத்தை தூய்மை செய்தல், கோவில் வளாகம், சமுதாய கழிவறைகள், ஆற்று படுகைகள் ஆகிய இடங்களில் தூய்மை பணிகள் செய்து கோலமிடபட்டது. இதில் ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சந்தனகிருஷ்ணன், ஜான்ராஜா, பொதுமக்கள், தன்னார்வலர்கள், இளைஞர்கள், குடியிருப்போர் நலச்சங்கம், மகளிர் சுய உதவி குழுவினர், அரசியல் பிரமுகர்கள், கவுன்சிலர்கள் பங்களிப்புடன் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture