/* */

காளியம்மன் கோயிலில் இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தினர் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தினர் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

காளியம்மன் கோயிலில் இரு சக்கர வாகன  பழுது பார்ப்போர் சங்கத்தினர் சிறப்பு வழிபாடு
X

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகளுக்கு, கோயில் விழாக்குழுவினர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தாரின் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் சக்தி காளியம்மன், சக்தி மாரியம்மன் கோயிலில் 23ம் ஆண்டு பூ மிதித்தல் விழாவையொட்டி மறு பூச்சாட்டு விழா நடைபெற்றது. மாரியம்மனுக்கு கம்பம் நடுதல், அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம், அம்மன் சக்தி அழைத்தல், மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் ஆராதனை, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோயிலில் பூ மிதித்தல் வைபவம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காளிமுத்து, நிர்வாகிகள் சுப்ரமணி, நந்தகுமார், சண்முகம், கிருஷ்ணராஜ், தங்கராசு மற்றும் குண்டம் பராமரிப்பு குழுவினர் செய்தனர். 3 நாட்களும் பக்தர்களுக்கு மூன்று வேளைகளும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது

குமாரபாளையம் காளியம்மன் கோயில் மகா குண்டம், தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. மகா குண்டம், பூ மிதித்தல் வைபவத்தையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் பெண்கள் முளைப்பாரியுடன் பெருமளவில் பங்கேற்றனர்.

குமாரபாளையம் காளியம்மன் கோயிலில் குண்டம், பூ மிதித்தல் வைபவத்தில் ஐந்தாயிரத்தும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்ற குண்டம் இறங்கினர். அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றதுடன் இரண்டு நாட்கள் தேர்த்திருவிழா நடைபெற்றது. வாண வேடிக்கை, அம்மன் திருவீதி உலா, அம்மன் மஞ்சள் நீர் திருவீதி உலா ஆகியன நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து அருள்பாலிக்க, பெண்கள் பெருமளவில் பங்கேற்று பக்தி பாடல்கள் பாட, ஊஞ்சல் விழா நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தாரின் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்படு வது வழக்கம். காவிரி ஆற்றிலிருந்து தீர்தக்குடங்கள், பால் குடங்கள், மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சங்க தலைவர் ராஜகணபதி, செயலர் மாதேஸ், பொருளர் கண்ணன், மற்றும் நிர்வாகிக ளுக்கு கோயில் விழாக்குழுவினர் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.



Updated On: 31 March 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்