/* */

நூதன முறையில் போலி லாட்டரி சீட்டு விற்பனை: இருவர் கைது

குமாரபாளையத்தில் நூதன முறையில் போலி லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப்பட்டார்கள்.

HIGHLIGHTS

நூதன முறையில் போலி லாட்டரி சீட்டு விற்பனை: இருவர் கைது
X

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று மதியம் 01:30 மணியளவில் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ராஜா சலூன் கடை அருகில் வெள்ளை தாளில் நெம்பர்கள் எழுதி, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு என்று கூறி பொதுமக்களிடம் ஏமாற்றி இருவர் விற்பது தெரியவந்தது. கையும், களவுமாக பிடிபட்ட இருவரிடம் வெள்ளை தாளில் நெம்பர்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள் நான்கினை பறிமுதல் செய்தனர். விசாரணையில் குமாரபாளையம் வேதாந்தபுரத்தை சேர்ந்த சேகர், 55, அம்மன் நகரை சேர்ந்த கவுதம், 29, என்பது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Updated On: 11 Jan 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!