/* */

குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது

குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது விற்ற மூவர் கைது செய்யப்பட்டு 104 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
X

பைல் படம்

குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டு 104 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

லோக்சபா தேர்தலையொட்டி மூன்று நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குமாரபாளையத்தில் விதி மீறி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், (57), என்பவர் மது விற்றுகொண்டிருந்தார். இவரை கைது செய்த போலீசார் இவரிடமிருந்து 69 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

இதே போல் காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே மது விற்றுக்கொண்டிருந்த வட்டமலையை சேர்ந்த ஜீவா, (24), சந்தோஷ்குமார், (21), இருவரை கைது செய்த போலீசார், இவர்களிடமிருந்து 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் 104 மது பாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 18 April 2024 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது