பிளஸ் 2 தேர்வில் திருநங்கை மாணவி தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் திருநங்கை மாணவி தேர்ச்சி
X

பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருநங்கை மாணவி ஸ்ரேயா

பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருநங்கை மாணவி ஸ்ரேயா தேர்ச்சி பெற்றதற்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த12ம் வகுப்பு திருநங்கை மாணவி ஸ்ரேயா என்பவர் 337மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.,பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்...

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.இதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 378பேர் தேர்வு எழுதிய நிலையில் 356பேர் தேர்ச்சி பெற்று 94சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அந்த பள்ளியில் படித்த ஆவராங்காடு பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி மகள் திருநங்கை ஸ்ரேயா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்துவந்தார். இந்நிலையில், நேற்று பிளஸ்2 தேர்வு வெளியானது. அதில், மாணவி ஸ்ரேயா, தமிழ் 62,ஆங்கிலம்:56,பொருளியல்:48,வணிகவியல்:54,கணக்கு:58,கணினியில்:59 என 337மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதல் திருநங்கையாக தேர்ச்சி பெற்றுள்ளார்.இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி மற்றும் சக ஆசிரியர்கள் மாணவிகள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஸ்ரேயா, தனது தாயின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் தொடர்ந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற பள்ளி தலைமை ஆசிரியர் சக ஆசிரியர்கள் மற்றும் தாயின் அரவணைப்பு காரணமாக 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று உயர் கல்வியை தொடர முடிந்தது. மேலும் அரசு தனக்கு உதவி செய்ய முன் வந்தால் பல்வேறு சாதனைகளை செய்ய முடியும். தன்னைப் போன்ற திருநங்கைகள் கல்வியில் கவனத்தை செலுத்தி வாழ்வின் மேன்மை பெற வேண்டும் என்றார் ஸ்ரேயா..


Tags

Next Story
ai in future agriculture