வாடகை செலுத்தாத கடைக்காரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

குமாரபாளையத்தில் வாடகை செலுத்தாத நகராட்சி கடையினருக்கு நகராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை செய்தனர்.
குமாரபாளையத்தில் வாடகை செலுத்தாத நகராட்சி கடையினருக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை செய்தனர்.
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், வார சந்தை வளாகம், பாலக்கரை உள்ளிட்ட பல இடங்களில் நகராட்சி கடைகள் உள்ளன. இதில் பலரும் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தற்போது தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் கடைகள் இரு பகுதியில் உள்ளன. ஒரு பக்கம் பேருந்துகள் வந்து செல்லும் பகுதியிலும், மற்றொரு பக்கம் மார்க்கெட் செயல்படும் பகுதியிலும் உள்ளன. மார்க்கெட் செயல்படும் பகுதியில் இருக்கும் நகராட்சி கடையினர், போதிய வருமானம் இல்லாமல் இருப்பதாக கூறி வருகின்றனர். வருட கடைசி என்பதால் ஆணையர் (பொ) ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் வாடகை நிலுவை வைத்துள்ள கடைக்காரர்களிடம்
வாடகையை செலுத்த சொல்லி நேரில் அறிவுறுத்தினர். ஒரு சிலர் வாடகையை செலுத்தினர். சிலர் ஓரிரு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாடகை செலுத்தாத கடைகள் சீல் வைக்கபடும் என எச்சரித்தனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் 48.45 சதவீதம் மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்வதால் தமிழ்நாடு மிகுந்த நகர்மயமான மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டின் 7.21 கோடி மக்கள் தொகையில் 3.50 கோடி மக்கள் தற்போது நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.
தமிழ்நாடு அடுத்த இரு பத்தாண்டுகளில் நகர்மயமாதலில் முன்னிற்கும். வேகமான நகர்மயமாக்கல் பெரும் பொருளாதாரத் தேவைகளையும், அதே சமயம் பெரும் வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பொருளாதார ரீதியான வாய்ப்புகள் சென்றடைய நகர்ப்புற பகுதிகளில் நிலையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அவசியமாகும்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சிகளை ஆளும் திறன் கொண்ட தன்னிறைவு பெற்ற நிறுவனங்களாக மேம்படுத்துவதே இவ்வரசின் நோக்கமாகும். நகர்ப்புற ஆளுமையை நன்கு வழி நடத்த சிறந்த பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகளும் தேவை என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது. இதற்காக நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை மிகச் சிறந்ததாக ஆக்குவதற்கு இவ்வமைப்பில் செயல்படுவோரின் திறன் மேம்பாட்டினை உயர்த்தும் நடவடிக்கைகளை இவ்வரசு செம்மைப்படுத்தி வலுப்படுத்தும்.
நகர்ப்புற வசிப்பிடங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தி மக்கள் சிறப்பாக வாழ தகுதியான சூழ்நிலையை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புற வறுமையானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அரசு தற்போது பல்வேறு கொள்கைகளை வகுத்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் மேற்கொள்வது உட்பட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாதாள சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் திட்டம், சாலை மேம்பாட்டு பணிகள், பேருந்து நிலையங்கள், குடிநீர் வசதிகள், குடிசை வீடுகளை மேம்படுத்துதல் மற்றும் நகர்ப்புர ஏழைகளுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu