Begin typing your search above and press return to search.
தட்டான்குட்டை ஊராட்சி கிராம சபை கூட்டம்: பொதுமக்கள் பங்கேற்பு
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் புஷ்பா தலைமை வகித்தார். நீடித்த, நிலைத்த வளர்ச்சியடைதலில் பொதுமக்களின் பங்கை வலியுறுத்தும் உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். தமிழக முதல்வர் அனுப்பிய வாழ்த்து செய்தியை ஊராட்சி தலைவர் வாசித்து காட்டினார்.
வேளாண்மைத்துறை மூலம் ஒரு வார காலத்திற்கு முகாம் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கான கடன் அட்டை வழங்கப்படவுள்ளது
எதிர்மேடு டீச்சர்ஸ் காலனி அருகே அமைக்கப்பட்டு வரும் செங்கல் சூளையை அகற்ற வேண்டும், மாவட்ட கலெக்டர் உத்தரவிட்ட கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும், தண்ணீர் வினியோகம் சீர்படுத்த வேண்டும், என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.