குமாரபாளையத்தில் 5 பாயிண்ட்ஸ் டென்னிஸ் அகாடமி : விரைவில் துவக்கம்

இளைஞர்களிடையே உள்ள விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கவும், குமாரபாளையம் பகுதி இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் விதமாகவும் குமாரபாளையத்தில் டென்னிஸ் அகாடமி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விளையாட்டு, மனதையும்,உடலையும் புத்துணர்வுடன் வைத்திருக்கும். குறிப்பாக இளைஞர்கள் உடல் ஆரோக்கியம் பேண விளையாட்டு மிக முக்கியம் ஆகும். மாணவர்கள் சிறப்பாக படிப்பதற்கும் விளையாட்டு உறுதுணையாக இருக்கும். தற்காலத்தில் செல்போன்களில் மாணவர்களும் பல இளைஞர்களும் மூழ்கிக்கிடப்பதால் அவர்கள் ஆரோக்கியம் இல்லாமல் உடல் நலம் கெட்டு துவண்டு கிடக்கின்றனர்.
அவர்களுக்கு விளையாட்டு ஒரு மாறுதலை ஏற்படுத்தும். மனம் சீரான சிந்தனைக்கு வழிவகுக்கும். குமாரபாளையம் பகுதி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த 5 பாயிண்ட்ஸ் டென்னிஸ் அகாடமி உதயமாகவுள்ளது. சூரியம்பாளையத்தில் லட்சுமி நகர் பஸ் நிறுத்தம் அருகே இந்த 5 பாயிண்ட்ஸ் டென்னிஸ் அகாடமி விரைவில் துவக்கப்பட உள்ளது. இப்பகுதி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு டென்னிஸ் பயிற்சி பெறவும், விளையாட்டில் சாதனை படைக்கவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu