குமாரபாளையம் அருகே செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் திருவிழா
குமாரபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் திருவிழாவில் முப்பாடு வழிபாடு, குதிரை வழிபாடு ஆகியன நடைபெற்றன.
குமாரபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் திருவிழா மார்ச் 29ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க, மஞ்சள் ஆடை கட்டி பெண்கள் தீர்தக்குடங்கள் எடுத்து வர, வண்ண மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்துடன் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் அருள்பாலித்தவாறு வந்தனர்.
தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, பொங்கல் வைத்து வழிபட்டனர். முப்பாடு வழிபாடு, குதிரை வழிபாடு ஆகியன நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu