/* */

குமாரபாளையத்தில் அதிகபட்ச மழை பதிவு

நேற்று மாலை பெய்த மழையில் குமாரபாளையம் பகுதியில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அதிகபட்ச  மழை பதிவு
X

மழை (மாதிரி படம்)

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று மாலை கனமழை பெய்தது.

கடந்த சில நாட்களாகவே பகலில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. ஆனாலும் மாலை வேளைகளில் மழை பெய்து பகல் நேரத்து வெப்பத்தை தணித்து விடுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று மாலை குமாரபாளையம், நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லி மலை உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. காற்றும் வேகமாக வீசியது. காற்று குறைவாக வீசியிருந்தால் இன்னும் மழை நீடித்திருக்கும் என்று இப்பகுதி விவசாயிகள் கூறினர். மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து வெள்ளம்போல ஒடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக குமாரபாளையத்தில் 28.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. நாமக்கல் 20 மி.மீ., சேந்தமங்கலம் 24மி.மீ., திருச்செங்கேடு 5மி.மீ., கொல்லிமலை 12மி.மீ., ராசிபுரம் 1.2மி.மீ., என மாவட்டம் முழுவதும் 98.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Updated On: 20 April 2021 9:34 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  2. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  3. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  4. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  5. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  6. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  7. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  8. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...