நவராத்திரி விழாவையொட்டி குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நவராத்திரி விழாவையொட்டி குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
X

குமாரபாளையம் நேதாஜி நகர் சந்தோஷிஅம்மன் கோவிலில் வட மாநில முறையில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவுடன், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  

நவராத்திரி விழாவையொட்டி குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நவராத்திரி விழாவையொட்டி குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.

இதே போல் கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. நேதாஜி நகர் சந்தோஷிஅம்மன் கோவிலில் வட மாநில முறையில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்படுகிறது. இந்த புதுமையான கொலுவை பக்தர்கள் பெருமளவில் திரண்டு வந்து பார்த்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags

Next Story
why is ai important to the future