குமாரபாளையம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

குமாரபாளையம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
X

குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் ஆஞ்சநேய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்

குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது

குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவிலில் ஆஞ்சநேய சுவாமிக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பன்னீர், உள்ளிட்ட பல சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளி பின்பற்றி சுவாமி தரிசனம் செய்யவும், முக கவசம் அணியவும், கிருமி நாசினி மருந்து பயன்படுத்திடவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவள்ளுவர் நகர் சவுந்தரராஜ பெருமாள் கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், கோட்டைமேடு வரதராஜ பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது.

Tags

Next Story
ai solutions for small business