குமாரபாளையம் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது

குமாரபாளையம் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற  நபர் கைது
X
குமாரபாளையம் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேரில் சென்ற போலீசார் அங்குள்ள பெட்டிக்கடையில் ஆய்வு செய்த போது புகையிலை பொருட்கள் 10 பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், பெட்டிக்கடை நடத்தி வரும் செல்வகுமார் (வயது 44,) என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி