/* */

கழிவுநீரை திறந்து விட்டதால் தனியார் மில் முன்பு பொதுமக்கள் போராட்டம்

பள்ளிபாளையம் அருகே, கழிவுநீரை திறந்து சாலையில் விட்டதால் ஆவேசமடைந்த பொதுமக்கள், தனியார் மில் முன்பு சாலை மறியல் செய்தனர்.

HIGHLIGHTS

கழிவுநீரை திறந்து விட்டதால் தனியார் மில்  முன்பு பொதுமக்கள் போராட்டம்
X

பள்ளிபாளையம் அருகே கழிவுநீரை திறந்து சாலையில் விட்டதால்,  தனியார் மில் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படையில் இருந்து, ஆனங்கூர் செல்லும் சாலை உள்ளது. இங்கு நெட்டவேலம்பாளையம் பகுதியில், தனியார் ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சாலையில் திறந்து விட்டதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தனியார் மில் வாயில் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து விரைந்து வந்த பள்ளிபாளையம் போலீசார், பொதுமக்களிடமும், மில் நிர்வாகத்தினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிட வைத்தனர்.

Updated On: 8 Dec 2021 5:36 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...