ரேக்ளா ரேஸ்: இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்ற குதிரைகள்

குமாரபாளையத்தில் நடந்த ரேக்ளா ரேஸில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து வந்த குதிரை
குமாரபாளையத்தில் ரேக்ளா போட்டி குதிரைகள் இலக்கை அடைய சீறி பாய்ந்தன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கற்பக விநாயகர் ரேக்ளா பந்தய குழு, குமாரபாளையம், பவானி குதிரை வண்டி சங்கம், கற்பக விநாயகர் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் குமாரபாளையம் இடைப்பாடி சாலை பகுதியில் ரேக்ளா போட்டிகள் நடந்தன.. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன் கொடியசைத்து போட்டிகளை தொடக்கி வைத்தனர்.
இதில் உள்ளூர் குதிரை, புதிய குதிரை, 43, 44 இன்ச் குதிரை, பெரிய குதிரை எனும் விதத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் குதிரைகள் எல்லையை தொடும் வகையில் சீறி பாய்ந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் ரொக்க பரிசுகள் மற்றும் கேடயங்கள், கோப்பைகள் பரிசாக வழங்கினார். நகர அ.தி.மு.க. செயலர் பாலசுப்ரமணி, நகராட்சி கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி அமைப்பாளர் சிங்காரவேல் கூறியதாவது: ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை யொட்டி ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டும் பல மாவட்டங்களிலிருந்து 80க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன.
உள்ளூர் குதிரை, புதிய குதிரை, 43 இன்ச் குதிரை, 45 இன்ச் குதிரை, பெரிய குதிரை என பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட கி.மீ. தூரம் எல்லை அமைக்கப்பட்டது.
ரேக்ளா வண்டியில் செல்லும் ஜாக்கிகள் குறிப்பிட்ட எல்லை பகுதிக்கு சென்று கொடியை வாங்கிக்கொண்டு திரும்பி வரவேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி ஒவ்வொருவரும் சென்று திரும்பி வருவார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, கேடயம், கோப்பை ஆகியன பரிசாக வழங்கப்படும்.
போட்டி துவங்கும் முன், ரேக்ளா வண்டிகள் வரிசையாக நிறுத்தி வைக்க, குழுக்கல் முறையில் டோக்கன் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்போர் யாருக்கும் எவ்வித மன சங்கடமும் ஏற்படாத வகையில் போட்டிகள் நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார். குமாரபாளையத்தில் நடந்த ரேக்ளா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி பரிசு வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu