/* */

வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில் பொதுப்பணித்துறை மெத்தனம்

குமாரபாளையம் அருகே, காற்றில் வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில் பொதுப்பணித்துறை மெத்தனம் காட்டி வருகிறது.

HIGHLIGHTS

வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில்  பொதுப்பணித்துறை மெத்தனம்
X

வீரப்பம்பாளையம், பூச்சக்காடு பகுதியில் பலத்த காற்று வீசியதில் பெரிய மரம் ஒன்று முறிந்து வாய்க்காலில் விழுந்துள்ளது.

குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், பூச்சக்காடு பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால், மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் ஓரமாக இருந்த பெரிய மரம் ஒன்று, முறிந்து வாய்க்காலில் விழுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது.

உடைந்து விழுந்த மரத்தை பொதுப்பணித்துறையினர் அகற்ற வேண்டுமென்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து பல நாட்கள் ஆகியும் இதனை அகற்ற மெத்தனம் காட்டி வருகிறார்கள். இதனால் ஆடு, மாடுகள் ஓட்டி செல்லவும், கால்நடைகளுக்கு தீவனங்கள் டூவீலரில் கொண்டு செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் இடையூறாக இருந்து வருகிறது. பலத்த காற்றினால் இதே பகுதியில் மற்றொரு மரம் ஒரு வீட்டின் மீது சாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 May 2022 11:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்