குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் இலவச காதொலி கருவி வழங்கல்

குமாரபாளையம் ஜி.ஹெச்.ல். இலவச காதொலி கருவிகளை சேர்மன் விஜய்கண்ணன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் படி காது கேளாதவர்களுக்கு இலவசமாக காதொலி கருவி வழங்கப்படுகிறது. குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் காது கேட்காத பயனாளிகள் 5 நபர்களுக்கு தலா எட்டாயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான இலவச காதொலி கருவி வழங்கும் நிகழ்வு தலைமை டாக்டர் பாரதி தலைமையில் நடைபெற்றது.
நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பங்கேற்று பயனாளிகளுக்கு காதொலி கருவிகளை வழங்கினார். இதில் காது, மூக்கு, தொண்டை டாக்டர் ப்ரீத்தா, கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ், தர்மராஜன், ராஜ், வேல்முருகன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், மார்க்கெட் வெங்கடேசன், கந்தசாமி, முத்துசாமி, ஐயப்பன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu