Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் திடீர் என இறந்தவர் பற்றி போலீசார் விசாரணை
குமாரபாளையத்தில் திடீர் என இறந்தவர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
HIGHLIGHTS
குமாரபாளையம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது75.) இவருக்கு நேற்று விடியற்காலை 05:00 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இவரை ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர், இவர் வழியில் இறந்து விட்டதாக கூறினார். பாலக்கரை பகுதி காவிரி ஆற்றின் கரையோர பகுதி. காவிரி ஆற்றில் சில நாட்களாக வெள்ளம் அதிகரித்து கொண்டே செல்வதால், இதன் காரணமாக இவர் இறந்து விட்டாரா? எனும் வகையில் குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.