/* */

பள்ளிபாளையம்: தொழிலாளியை தாக்கியதாக தந்தை-மகன் மீது வழக்கு

தொழிலாளியை அடித்ததாக தந்தை, மகன் இருவர் மீதும் பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையம்: தொழிலாளியை தாக்கியதாக தந்தை-மகன் மீது வழக்கு
X

தொழிலாளியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் திரண்ட ஊர் பொதுமக்கள்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த ஐந்துபனை பகுதியை சேர்ந்தவர் சக்தி. தனியார் நூல் மில்லில் வேலை பார்த்துவரும் சக்தி, இரண்டு தினங்களுக்கு முன்பு, தனது இருசக்கர வாகனத்தில் ஐந்துபனை பகுதியில் நின்றிருந்த போது , ஆனங்கூரைச் சேர்ந்த மனோகரன் மகன் அபி, சக்தியின் வாகனத்தில் மோதியதாக கூறப்படுகிறது.

இதனால், இருவரும் இடையே எழுந்த வாய்த்தகராறு, வாக்குவாதமாக மாறி, சக்தியை அபி தனது தந்தை மனோகரனை அழைத்து வந்து, சாதியை குறிப்பிட்டு, தந்தை- மகன் இருவரும் சக்தியை சேர்ந்து அடித்ததாக கூறப்படுகிறது. உள்காயங்களுடன் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்தி அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளிபாளையம் காவல்துறையினர், தந்தை - மகன் இருவரையும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி, சக்தியின் உறவினர்கள் ஐந்துபனை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் திரண்டர். காவல் அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பிறகு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 21 July 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  3. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  4. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  6. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  8. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  9. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை