போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : போலீசார் விழிப்புணர்வு

போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : போலீசார் விழிப்புணர்வு
X

பைல் படம்

போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு போலீசார் விழிப்புணர்வு பதாகை அமைத்து பிரசாரம் செய்தனர்

குமாரபாளையத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என பதாகை வைத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

குமாரபாளையம் அரசு பள்ளியில் போலீசார் பங்கேற்று போதை விழிப்புணர்வு பிரசாரம் செய்து, மரக்கன்றுகள் நட்டனர்.

பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கம் வராமல் தடுத்திட போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் அருகே உள்ள குள்ளநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போலீசார் சார்பில் போதை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. குப்பாண்டபாளையம் ஊராட்சி தலைவி கவிதா தலைமை வகித்தார்.

இதில் காவல் ஆய்வாளர் தவமணி பேசியதாவது: பள்ளிப்பருவத்தில் நல்ல பழக்க மேற்கொள்ள வேண்டும். கஞ்சா, ஹான்ஸ், போதை மாத்திரைகள், போதை ஊசிகள் போன்ற போதை பொருட்களை உபயோகப்படுத்தகூடாது. அவ்வாறு அதனை வற்புறுத்தி வாங்க சொல்லும் நபர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தாருங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என பேனர் வைத்து போலீசார் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 2018 ஆம் ஆண்டு முதல் மருந்து தேவை குறைப்புக்கான தேசிய செயல் திட்டத்தை (NAPDDR) செயல்படுத்தி வருகிறது. தடுப்புக் கல்வி, விழிப்புணர்வு உருவாக்கம், அடையாளம், ஆலோசனை, சிகிச்சை மற்றும் சிகிச்சை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

போதைப்பொருள் சார்ந்த நபர்களின் மறுவாழ்வு, மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் கூட்டு முயற்சிகள் மூலம் சேவை வழங்குநர்களின் பயிற்சி மற்றும் திறனை மேம்படுத்துதல், தனிநபர், குடும்பம் ஆகியவற்றில் பொருள் சார்ந்திருப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் கல்வி கற்பித்தல். பணியிடங்கள் மற்றும் சமூகம் மற்றும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்க, பொருட்களைச் சார்ந்திருக்கும் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான களங்கம் மற்றும் பாகுபாட்டைக் குறைக்கிறது.போதைப்பொருள் தேவையைக் குறைப்பதற்காக போதை ஒழிப்பு பிரச்சாரங்கள் மூலம் விழிப்புணர்வு உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன,

Tags

Next Story
ai in future agriculture