/* */

கோம்பு பள்ளத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க நகராட்சி கமிஷனரிடம் ம.நீ.ம., மனு

குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கோம்பு பள்ளத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க நகராட்சி கமிஷனரிடம் ம.நீ.ம., மனு
X

குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி நகர செயலர் சித்ரா தலைமையில் நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம் மனு கொடுத்தனர்.

குமாரபாளையம் தம்மண்ணன் வீதியில் நகரின் கழிவுநீர் செல்லும் பெரிய வடிகாலான கோம்பு பள்ளம் செல்கிறது. இந்த வீதியில் அப்பன் மேடு என்ற இடத்தில் சாலையை கடக்கும் இடத்தில் தரைமட்ட பாலம் உள்ளது.

சிறிய மழை வந்தாலும் அதிக தண்ணீர் இந்த பள்ளத்தில் செல்வதால் பாலத்தின் மீது தண்ணீர் செல்லும் நிலை ஏற்படுகிறது. மேலும் அருகில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதனால் இந்த இடத்தில் தூய்மை பணி மேற்கொண்டு, உயர்மட்ட பாலம் அமைக்க நீண்ட காலமாக பல தரப்பினர் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. நேற்றுமுன்தினம் பெய்த சிறு மழையில் அதிக தண்ணீர் சென்றதால் இந்த சாலை துண்டிக்கப்பட்டது.

இது குறித்து குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர மகளிரணி செயலர் சித்ரா தலைமையில், இந்த இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டி, நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட கமிஷனர் சசிகலா இது பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதில் மகளிரணி நிர்வாகிகள் ரேவதி, உஷா, மாவட்ட துணை செயலர் சிவகுமார், நிர்வாகிகள் சரவணன், கார்த்திக், விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 3 Dec 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!