/* */

தலைவர் சிலைகளை பாதுகாக்கக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அரசுப்பள்ளியில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்த முயன்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

HIGHLIGHTS

தலைவர் சிலைகளை பாதுகாக்கக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
X

இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிப்புதூர் அரசு பள்ளி வளாகப்பகுதியில் சரஸ்வதி சிலை, திருவள்ளுவர் சிலை வைப்பது தொடர்பான பிரச்சனையில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்த ஒரு சிலர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது சர்ச்சை உருவான நிலையில், இரண்டு சிலைகளும் அகற்றப்பட்டன.

இந்நிலையில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்த முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ் புலிகள் கட்சி மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் கூட்டமைப்பின் முன்னணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளுவர் சிலையின் மீது தாக்குதல் நடத்த முயன்ற நபர்களை கைது செய்ய வேண்டும்; பள்ளிபாளையம் பகுதியில் உள்ள தேச தலைவர்களின் சிலைகளுக்கு கூண்டு அமைத்து பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

Updated On: 18 Jun 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  2. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  3. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  8. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  9. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  10. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...