தலைவர் சிலைகளை பாதுகாக்கக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிப்புதூர் அரசு பள்ளி வளாகப்பகுதியில் சரஸ்வதி சிலை, திருவள்ளுவர் சிலை வைப்பது தொடர்பான பிரச்சனையில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்த ஒரு சிலர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது சர்ச்சை உருவான நிலையில், இரண்டு சிலைகளும் அகற்றப்பட்டன.
இந்நிலையில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்த முயன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ் புலிகள் கட்சி மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் கூட்டமைப்பின் முன்னணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர் சிலையின் மீது தாக்குதல் நடத்த முயன்ற நபர்களை கைது செய்ய வேண்டும்; பள்ளிபாளையம் பகுதியில் உள்ள தேச தலைவர்களின் சிலைகளுக்கு கூண்டு அமைத்து பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu