/* */

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
X

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட அமைப்பாளர் முருகேசன் தலைமை வகித்து பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் உயர்த்தப்படவில்லை. விலைவாசி உயர்ந்துள்ளதால் இவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் 40 சதவீத ஊனத்திற்கு அதிகபட்சம் 3 ஆயிரத்து 800 ரூபாயும், தெலுங்கானாவில் 3 ஆயிரத்து 016 ரூபாயும் வழங்கி வருகிறார்கள். அதே போல் தமிழகத்தில் 3 ஆயிரமும், கடும் ஊனமுற்றவர்களுக்கு 5 ஆயிரமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நகர தலைவர் பராசக்தி, நகர துணை தலைவர் ஆறுமுகம், மாவட்ட குழு உறுப்பினர்கள் சசிகலா, செல்வராணி, லலிதா, சின்னராசு, நடேசன், நிர்வாகிகள் அனந்தன், ஆனந்தகுமார், மோகன், சண்முகம் உள்பட மாற்றுத்திறனாளிகள் பலர் பங்கேற்றனர்.

இந்த போராட்டம் நேற்று காலை 10:00 மணிக்கு தொடங்கி மாலை 06:00 மணி வரை நீடித்தது.

Updated On: 14 Dec 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  2. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  4. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  6. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  7. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!
  8. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  10. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...