சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய நகராட்சி தலைவர்

குமாரபாளையம் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை நகராட்சி தலைவர் வழங்கினார்.
குமாரபாளையம் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை நகராட்சி தலைவர் வழங்கினார்.
குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட சாலையோர சிறுவியாபாரிகள் கணக்கெடுப்பு நகராட்சி சார்பில் அண்மையில் நடைபெற்றது. அதன்படி கணக்கெடுக்கப்பட்ட 169 சாலையோர சிறுவியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார். கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், ஜேம்ஸ், கனகலட்சுமி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, குமாரபாளையம் நகராட்சிகுட்பட்ட காமராஜபுரம், ராஜராஜன் நகர், மஞ்சுளா மில் வீதி ஆகிய பகுதிகளில் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்க அப்பகுதியினர் நகராட்சி தலைவர் விஜய்கண்ணனிடம் கோரிக்கை வைத்தனர். இதன்படி, திட்ட அறிக்கை தயார் செய்து, மேல்நிலைத்தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பூமி பூஜை போடப்பட்டு பணிகள் நடந்த நிலையில், கட்டுமான பணிகள் முழுமை பெற்று, இதன் திறப்பு விழாவில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமை வகித்து, திறந்து வைத்தார்.
நகராட்சி ஆணையாளர் (பொ)ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ்,நகர மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர்கள் பூங்கொடி, வேல்முருகன், தர்மராஜன், கோவிந்தராஜ், ராஜ் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கதிரேசன், சரவணன், ஜூல் பிகார் அலி, ஆனந்தன், கந்தசாமி, வேலுமணி,அருண்குமார் மற்றும் நகராட்சி குடிநீர் பிரிவு அதிகாரி சரவணன், உதவி பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu