மகா சிவராத்திரி மயான சூறையாடுதல், மகா குண்டம் விழா தீர்த்தக்குட ஊர்வலம்

மகா சிவராத்திரி  மயான சூறையாடுதல், மகா குண்டம் விழா தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையத்தில் மயான பெரியாயி அம்மன், அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி மயான சூறையாடுதல், மகா குண்டம் விழாவையொட்டி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் வந்தபோது பெரியான்டிச்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு வந்தார்.

குமாரபாளையத்தில் மகா சிவராத்திரி மயான சூறையாடுதல், மகா குண்டம் விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தட்டான்குட்டை மயான பெரியாயி அம்மன், அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி மயான சூறையாடுதல், மகா குண்டம் விழா பிப். 24ல் முகூர்த்தக்கால் நடுதல், பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. நேற்று காவிரி ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. இதில் பெண்கள் அக்னி சட்டி எடுத்தவாறும், அலகு குத்தியவாறும் வந்தனர். கணபதி ஹோமம், விளையாட்டு பெரியாண்டிச்சி அம்மன் கண் திறப்பு விழா, காடுகட்டும் விழா ஆகியன நடந்தன.


இன்று மயானத்திலிருந்து காட்டேரி அழைத்து வருதல், மயானத்திலிருந்து மாசானம் புறப்படுதல், பெரியாண்டிச்சி அம்மனுக்கு தாலாட்டு விழா நடைபெறவுள்ளது. மார்ச். 12ல் மகா குண்டம் பூ மிதித்தல் நடைபெறவுள்ளது. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்கள் வேண்டுதல் நிறைவேற்றிட மஞ்சள் ஆடை அணிந்தவாறு விரதம் இருந்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

குமாரபாளையத்தில் மயான பெரியாயி அம்மன், அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி மயான சூறையாடுதல், மகா குண்டம் விழாவையொட்டி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம், அக்னி சட்டியுடன் நடந்தது. பெண்கள் அலகு குத்தியபடி வந்தனர்.

Tags

Next Story