/* */

குமாரபாளையம்: வாய்க்காலில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை

குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையத்தில், வாய்க்காலில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம்: வாய்க்காலில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை
X

தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், அருந்ததியர் தெரு பாலம் அருகே,  மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில், மழையால் சாய்ந்து விழுந்துள்ள மரம்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், அருந்ததியர் தெரு பாலம் அருகே மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் செல்கிறது. அண்மையில் பெய்த கனமழையின்போது, மரம் ஒன்று சாய்ந்து, வாய்க்காலில் விழுந்தது.

இது, இதுவரை அகற்றப்படவில்லை. இதனால், தண்ணீரில் மிதந்து வரும் செடி கொடிகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் யாவும் சேர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி இப்பகுதி பொதுமக்கள், பொதுப்பணித்துறையினருக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

நாளுக்குநாள் சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், வாய்க்காலில் சாய்ந்த மரத்தை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 4 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  2. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  3. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  4. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  6. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  7. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  8. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  9. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  10. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி