/* */

பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல்!

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறையால், வழியில் நிற்கும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல்!
X

பட விளக்கம் :

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இட பற்றாக்குறையால், வழியில் நிற்கும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

பஸ் ஸ்டாண்டில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல்

குமாரபாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டிடங்கள் சேதமானதால், அவற்றை அகற்றி, புதிய கட்டிடங்களாக மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பஸ்கள் உள்ளே நுழையும் பகுதி அடைக்கப்பட்டு, பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பஸ்கள் அனைத்தும் டெம்போ ஸ்டாண்ட் வழியாக திருப்பி அனுப்பப்பட்டது. பயணிகள் அந்த இடத்தில் இறங்கியும், ஏறியும் வந்தனர். பஸ் ஸ்டாண்ட் கடையினருக்கு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டெம்போக்கள், டூரிஸ்ட் வேன்கள், டூரிஸ்ட் கார்கள் மாற்று இடத்தில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பஸ் ஸ்டாண்டில் போதிய இட வசதி இல்லாததால், டைமிங் பிரச்சனை காரணமாக, போதிய அவகாசம் இருக்கும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் நுழைவுப்பகுதி இடைப்பாடி சாலை, மீன் மார்க்கெட் அருகே நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் தேவூர், இடைப்பாடி, பவானி, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்ல, போதிய இட வசதி இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க, பஸ் ஸ்டாண்ட் அருகே, பழைய சார்பதிவாளர் அலுவலகம் இருக்கும் ஜே.கே.கே. வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டால், யாருக்கும் எவ்வித இடையூறும் இருக்காது. இது குறித்து மாவட்ட நிர்வாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On: 20 April 2024 11:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...