Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் ஜவுளி வியாபாரியின் இருசக்கரவாகனம் திருட்டு
குமாரபாளையத்தில் ஜவுளி வியாபாரியின் இருசக்கரவாகனம் திருடப்பட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
குமாரபாளையம் அம்மன் நகர் நேரு வீதியை சேர்ந்தவர் தங்க பிரகாஷ் (வயது 34,). ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவர் தனது பஜாஜ் பல்சர் வாகனத்தை ஜூன் 7ம் தேதி இரவு தன் வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். காலை 06.30 மணியளவில் எழுந்து வந்து பார்த்த போது தனது வாகனத்தை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் காணாமல் போன வாகனம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.