விடியல் ஆரம்பம் சார்பில் மாசு கட்டுப்பாட்டு தினம்

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் மாசு கட்டுப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் மாசு கட்டுப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெறும் இல்லம் தேடி கல்வி மையத்தில் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.
மாசு கட்டுப்பாட்டு பற்றி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இதில் இல்லம் தேடி தன்னார்வலர் ராஜாத்தி, தீனா, அங்கப்பன்,பங்கேற்றனர்.
குமாரபாளையம் அரசு பள்ளியில் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டது
அரசு பள்ளிகளில் போலீஸார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு, மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு போட்டிகள் வைத்து பரிசு வழங்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் அருகில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் விடியல் ஆரம்பம் ஏற்பாட்டின் பேரில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு, தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் விளையாட்டு போட்டிகள், கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸார் பரிசுகள் வழங்கினர். பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விடியல் பிரகாஷ், தீனா, உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu