/* */

குமாரபாளையத்தில் கோடையை குளிர்வித்த மழை: பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி

கோடை மழை பெய்து குமாரபாளையம் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கோடையை குளிர்வித்த மழை: பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி
X

மழை (மாதிரி படம்)

கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் வெயில் கடுமையாக வாட்டி வந்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியிலும் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வீசியது.

அதனால், பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீர் மழை பெய்தது. குமாரபாளையம் பகுதி முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து விவசாயிகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. காற்று வேகமாக வீசியதால் சில இடங்களில் மழை குறைந்து போய்விட்டதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது. இன்று காலை வரையிலும் கூட வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது.

தொடர்ந்து வெயில் அதிகமாக இருப்பதால் மழையும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோடை மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை பெய்வதால் கிணறுகளில் தண்ணீர் ஊற்றெடுக்கும். ஆழ்துளை கிணறுகளிலும் நீர் மட்டம் உயரும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Updated On: 15 April 2021 6:36 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்