கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நகராட்சி வாகனத்தை மட்டும் பயன்டுத்த வேண்டும்

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நகராட்சி வாகனத்தை மட்டும் பயன்டுத்த வேண்டும்
X

பைல் படம்

கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய நகராட்சி வாகனத்தை மட்டுமே பயன்டுத்த வேண்டுமென குமாரபாளையம் நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்

கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய நகராட்சி வாகனம் மட்டும் பயன்டுத்த வேண்டும் என குமாரபாளையம் நகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து குமாரபாளையம் நகராட்சி ஆணையர் சரவணன் தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நகராட்சி பகுதிக்குள்பட்ட குடியுருப்புகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணிக்கு நகராட்சிக்கு சொந்தமான வாகனம் அல்லது நகராட்சி மூலம் உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதற்காக 14420 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு சட்டம் 2013 கீழ் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனிதர்களை பயன்படுத்தினால், அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

அதிக பட்சமாக 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் மனிதர்கள் ஈடுபடும் பொழுது, உயிரிழப்பு ஏற்பட்டால், அந்த கட்டிடத்தின் உரிமையாளர் உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நகராட்சி வாகனம் அல்லது நகராட்சியால் உரிமம் பெற்ற வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு நகராட்சி ஆணையாளர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture