குமாரபாளையம் நிலமுகவர்கள் சங்கம் சார்பில் சானிடைசர், கையுறை வழங்கல்
X
குமாரபாளையம் காவல் நிலையத்தில், நில முகவர்கள் நல சங்கத்தின் சார்பில்,சானிடைஸர்கள் வழங்கிய பொழுது.
By - K.S.Balakumaran, Reporter |21 Jun 2021 6:24 PM IST
குமாரபாலையம் நில முகவர்கள் நலச்சங்கம் சார்பில், ₹30 ஆயிரம் மதிப்புள்ள சானிடைஸர், முகக் கவசங்கள், கையுறைகள், அரசுத்துறை சார்ந்த அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில், குமாரபாளையம் சார்பதிவாளர் அலுவலக,ம் அரசு மருத்துவமனை, மற்றும் காவல் நிலையத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான முகக் கவசங்கள், சானிடைஸர், மற்றும் கையுறைகள் அனைத்தும் ஒவ்வொரு துறைக்கும், இன்று வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், குமாரபாளையம் நில முகவர்கள் முன்னேற்ற நல சங்கம் தலைவர் முறுக்குகாரர் என்கிற எம்.எஸ். சின்னுசாமி, பொருளாளர் கே. சரவணன் உள்ளிட்டோர் வழங்கினர். இதில், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu