அரசு அனுமதியில்லாமல்மது விற்ற 2 நபர்கள் கைது

பைல் படம்
குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது விற்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம் நகரில் பகுதியில் பல இடங்களில் மது விற்பதாக தகவல் கிடைத்து, இன்ஸ்பெக்டர் ரவி, தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கல்லங்காட்டுவலசு பகுதியில் ஒருவர் மது பாட்டில்கள் விற்றுக் கொண்டி ருந்தார். நேரில் சென்ற போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர். விசாரனையில் அவர் சத்யா நகர் பகுதியை சேர்ந்த சுசீந்திரன்( 32,) என்பது தெரிய வந்தது. இவர் மீது வழக்குப்பதிவு செய்து இவரிடமிருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
இதே போல் ராமநாதபுரத்தை சேர்ந்த சங்கர்(22,) என்பவர், குமாரபாளையம் அருகே சானார்பாளையம் பகுதியில் மது விற்கும் போது பிடிபட்டார். இவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்ததுடன், இருவரையும் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu