குமாரபாளையத்தில் வான வேடிக்கையுடன் காளியம்மன் திருவிழா

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி காவிரி ஆற்றில் வான வேடிக்கை நடைபெற்றது.
குமாரபாளையம் காளியம்மன் கோயில் மகா குண்டம், தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன் தினம் மகா குண்டம், பூ மிதித்தல் வைபவத்தில் ஐந்தாயிரத்தும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்ற குண்டம் இறங்கினர். நேற்று காலை அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா துவங்கியது. பக்தர்கள் ஆர்வத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ராஜா வீதி, சேலம் சாலை, தம்மண்ணன் சாலை, வழியாக வந்த தேர் புத்தர் வீதியில் நிறுத்தப்பட்டது. மீண்டும் இங்கிருந்து வடம் பிடித்து இழுத்து சென்று காளியம்மன் கோயில் அருகே பக்தர்கள் நிலை சேர்த்தனர். நேற்று இரவு காவிரி ஆற்றில் வான வேடிக்கை நடைபெற்றது. இதனை காவிரி பழைய மற்றும் புதிய பாலங்கள், காவிரி ஆற்றின் மணல் பகுதி, பவானி காவிரி கரையோர பகுதி மக்கள் என பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.
குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவிலில் பூ மிதித்தல் வைபவம் நடைபெற்றது . நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu